பிச்சைக்காரன்: சாமி, ரொம்ப பசிக்குது. சோறு வாங்கி குடுங்க. இவன்: கவலைப்படாதே, உனக்கு சரக்கே வாங்கித்தாரேன். பிச்சைக்காரன்: அய்யோ சாமி, எனக்கு பழக்கம் இல்லீங்க. இவன்: சரி வா, சிகரெட் வாங்கித்தாரேன். பிச்சைக்காரன்: வேண்டாம் சாமி. சோறு மட்டும் போதும். இவன்: சரி வா, குதிரை ரேஸுக்கு போவோம். அப்புறம் சாப்பாடு வாங்கி தாரேன். பிச்சைக்காரன் : எனக்கு சூதாட்டம் புடிக்காது சாமி. இவன்: சரி வா, உனக்கு சாப்பாடே வாங்கி தாரேன். அதுக்கு முன்னாலே நீ, என் வீடு வரை வரணும். பிச்சைக்காரன்: எதுக்கு சாமி. இவன்: குடி., சூதாட்டம் என எந்த கெட்டபழக்கமும் இல்லாம, இருக்கும் ஒரு மனிதனின் நிலமைய. என் மனைவிக்கு உன்ன வச்சி உணர்த்தணும்.
எனக்கு பிடித்த சமூக வலைத்தள பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.. ☺