Skip to main content

Posts

Showing posts from March, 2017

நானும் என் நண்பனும் பாரில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம்...

படித்ததில் சிரித்தது நானும் என் நண்பனும் பாரில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம் அப்போது அருகில் ஒருவர் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். ஸ்பீக்கர் ஆனில் இருந்த்தால் மறுமுனையில் பேசிய அவர் மனைவியின் குரல் தெளிவாக கேட்டது. "ஏங்க…நான் இப்ப ஷாப்பிங் மால் உள்ளே இருக்கேன். நான் சொன்னேனே.. டிஜிட்டல் கேமரா.. இங்க இருக்குங்க... இருபதாயிரம்தான் விலை. வாங்கிகட்டுமா...?" "வாங்கிக்க...!" "அப்புறம்... நான் கேட்டேனே ஒரு வைர நெக்லஸ்... அதுவும் இங்க இருக்குங்க... விலைதான் ஒண்ணரை லட்சம் சொல்றான்..." "ஒண்ணரை லட்சம்தான... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...!" “அப்புறம் ஒரு புடவை பார்த்தேன் ரொம்ப காஸ்ட்லியா சொல்றான்” “ரேட்ட பார்க்காதேமா உனக்கு புடிச்சி இருந்தா வாங்கிறுமா” "ஏங்க... அப்புறம் நாம பார்த்தோமே ஒரு கார்... இப்ப  ஆஃபர் போட்டிருக்காங்க... விலை பதினெட்டு லட்சம் சொல்லறான்... உங்க செக் இருக்கு குடுத்துறவா..?" "ஓகேமா…… இதுலாம் கேக்கலாமா உனக்கு புடிச்சிருந்தா போதும்" "ஓகேங்க... சீக்கிரம் விட்டுக்கு வாங்கன்னு ......

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்...

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?” 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல” வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” “ஒண்ணுமே ஆகாது சார்” ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?” “உங்க கை வலிக்கும் சார்” “ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…” “உங்க கை அப்படியே மரத்துடும் சார்” “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?” “இல்லை சார். அது வந்து…” “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?” “கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்” ”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆ...

புத்தர் ஒரு உண்மை சொன்னார்...

புத்தர் ஒரு உண்மை சொன்னார், இறப்பு எல்லோருக்கும் வந்தே தீரும் ஆனால் யாரும் இறக்க விரும்புவதில்லை ஆனால் இன்று நிலைமை வேறு ,விபரீதமாக உள்ளது உணவுஎல்லோருக்கும் வேண்டும் ஆனால் யாரும் பயிர் செய்ய விரும்புவதில்லை,  தண்ணீர் எல்லோருக்கும் வேண்டும் யாரும் அதை சேமிக்க விரும்புவதில்லை , பால் எல்லோருக்கும் வேண்டும் யாரும் பசுவை வளர்க்க விரும்புவதில்லை, நிழல் எல்லோருக்கும் வேண்டும் யாரும் மரம் வளர்க்க விரும்புவதில்லை , மருமகள் எல்லோருக்கும் வேண்டும் யாரும் மகளை பெற்றெடுக்க விரும்பவில்லை, நல்ல செய்தி படித்து ஆஹா வென, புகழ்பவர் அதை மக்களிடம் கொண்டுசெல்ல விரும்புவதே இல்லை.  நீங்கள் ???????"""""

பாலியல் வன்முறைக்கு எதிராக எல்லோரும் இதை பகிருங்கள் தோழர்களே...!

அப்பான்னு நினைச்சேன்...! அசிங்கமாய் தொட்டான்.....! சகோதரன்னு பழகினேன்....! சங்கடமாய் தொட்டான்........! மாமான்னு பேசினேன்......! மட்டமாய் நடந்தான்.....! உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றன.....! பாதுகாப்பை தேடி பள்ளிக்கு சென்றேன்...! ஆசிரியனும் அரவணைத்து மறுக்காதே மதிப்பெண் குறையும் என்றான்....! நட்புக்கரமொன்று நண்பனாய் தலைகோதி தூங்கென்றான்....! மரத்த மனம் மருண்டு சுருண்டு தூங்கையில் கைப்பேசியில் படமெடுத்தான் அவனும் ஆண்தானே...! கதறி அழுது கடவுளிடம் சென்றேன் ஆறுதலாய் தொட்டு தடவி ஆண்டவன் துணையென்றான் பூசாரியான்....! அலறி ஓடுகிறேன் எங்கே போவேன்? சமத்துவம் வந்ததெனெ சத்தமாய் கூறுகின்றனர் பெண்ணை பெண்ணாக பார்க்காமல் மனிதராய் பார்ப்பது எக்காலம்? பாவிகளின் பாலியல் வன்முறை என்று ஓயுமோ? #பாலியல வன்முறைக்கு எதிராக எல்லோரும் இதை பகிருங்கள் தோழர்களே...! அப்படி என்னடா உங்களுக்கு அடங்காத வெறி சிதைத்துவிட்டீர்களே சிறு பிள்ளையின் குறி...! பால்மணம் மாறா பச்சிளங்குழந்தைகளை பாலியல் வல்லுறவால் பாழ்படுத்தி கொன்றீர்களே...! உறுப்பை மட்டு...

தெரிந்துகொள்வோம்...

#தெரிந்துகொள்வோம். ஆங்கிலத்தில் 1 முதல் 999 வரை எழுதும்போது, A என்ற எழுத்தே வராது. ஒரு முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேரத்தை குறிக்கிறது. செல்போனில் பயன்படுத்தப்படும் சிம்கார்டு என்பதன் விரிவாக்கம், #சப்ஸ்கிரைப்பர்ஸ்_ஐடன்டி_மாட்யூல் என்பதாகும். ஒரு குயர் என்பது 24 தாள்கள்.  ஒரு ரீம் என்பது 20 குயர்கள். ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள். ஒரு டேபிள்ஸ்பூன் என்பது 120 துளிகள் கொண்டது. கொலம்பியாவில் உள்ள ஷனீகர் என்ற நதியில் மீன்களே கிடையாது. துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு ஸ்பெயின். உலகில் கடலின் மொத்த பரப்பளவு, 360080000 சதுர கிலோமீட்டர்கள். உலகின் குறைந்த நீளம் கொண்ட இருப்புப்பாதை உள்ள நாடு வாடிகன்.   மொத்த நீளம் 90 அடி மட்டுமே.   இது இத்தாலி ரயில்வேயுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரிசாவின் பழைய பெயர் கலிங்கம். அசாமின் பழைய பெயர் காமரூபம். ஈரானின் பழைய பெயர் பெர்ஷியா. ஈராக்கின் பழைய பெயர் மெசபடோமியா. நமது தலையின் எடை 3.175 கிலோகிராம். துருவப்பிரதேசத்தில் கொசுக்கள் இல்லை.

மனைவி ...கணவனிடம் கேட்டாள்....

👱‍♀மனைவி ...கணவனிடம் கேட்டாள்.... நான் ஒரு 4நாள் உங்க கண்ணுல படாம இருந்தா நீங்க எப்படி feel பண்ணுவீங்க.? அப்பாவி 👱🏽கணவன் (சந்தோசத்துல அவசர பட்டு).||||||| ரொம்ப happyயா feel பண்ணுவேன்......😀😀😀😀😀 அப்புறம் என்ன.? திங்கள் கிழமையும் ...அவனுக்கு பொண்டாட்டி கண்ணுக்கு படல.... 😑😑😑 செவ்வாய் கிழமையும் பொண்டாட்டி கண்ணுல படல😑😑😑😑😑 புதன் கிழமையும் ...பொண்டாட்டி கண்ல படல😑😑😑😑😑 வியாழ கிழமையும் பொண்டாட்டி கண்ல படல😑😑😑😑😑 வெள்ளிகிழமை சாயங்காலமா... கண்ல வீக்கம் குறைஞ்சி..லேசா தெரிய ஆரம்பி்ச்சா மகராசி😉😉😉😉😉😉😉

ஒருவர் தவறான உணவை உட்கொண்டால்..!

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம், தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்! அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும். உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும். இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார். இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும். ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும். உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும். வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார். அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார். உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும். மூளை அடுத்து சளியாக மாற்ற...

கொஞ்சம் நேரம் ஒதுக்கி இதை படியுங்கள் தயவுசெய்து முழுவதும் படிக்கவும்...

அம்மா... நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன். கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன். இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது. அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன். அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது. அதற்கு பதில் பேசும் விதமாக நிறைய முறை கை கால்களை அசைத்திருக்கிறேன். கூடவே அவ்வப்பொழுது இன்னொரு குரலும் கேட்கும். ஆனால் அது கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறது. எத்தனை விதமான சப்தங்கள் கேட்டாலும் எப்போதும் மாறாதிருப்பது அந்த இதயத்துடிப்பின் சப்தம் தான். அதுயாரிடம் இருந்து வருகிறது என்பதை நிச்சயம் ஒருநாள் பார்த்து விட வேண்டும். என்னவோ தெரியவில்லை... இரண்டு மூன்று நாட்களாக இங்கிருந்து வெளியே சென்று வ...

அறிவுடையோரின் அற்புதமொழிகள்..

👌👌👌👍👏👏👍👌👌👌 🚩🚩 தன்னை அறிந்தவன் ஆசை பட மாட்டான் உலகை அறிந்தவன் கோவ பட மாட்டான் இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்ப பட மாட்டான்                                       பகவத் கீதை 🚩🚩 யார் என்ன சொன்னாலும் உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே ஒரு சமயம் நீ  மாற்றினால் ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்                                                                                             கண்ணதாசன் 🚩🚩 வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை                                ...

மனைவிகளின் முன்னேற்றம் ஆண்டுகளில்...

1960 கணவர் : _டீ?_ மனைவி: _(கையில் டீ கப்புடன் தயாராக நின்று கொண்டிருப்பார்)_ 1970 கணவர் : _டீ?_ மனைவி: _இதோ எடுத்துட்டு வந்துட்டேன்ங்க_ 1980 கணவர் : _டீ?_ மனைவி: _இதோ வந்துட்டேன்_ 1990 கணவர் : _டீ?_ மனைவி: _பொறுங்க!! வந்துட்டேன்_ 2000 கணவர் : _டீ?_ மனைவி: _டீவி சீரியலில் விளம்பரம் வரும் போது போட்டு தறேன்_ 2010 கணவர் : _டீ?_ மனைவி: ஏன் கத்தறீங்க. ஃபிரியா இருக்கும் போது போட்டு தறேன். அவசரம்ன்னா நீங்களே போய் போட்டுக்குங்க_ தற்போது கணவர் : _டீ?_ மனைவி: _என்ன?_ கணவர் : _டீ போட போறேன். உனக்கும்.... வேணுமான்னு கேட்கலாம்ன்னு தோணுச்சு?_ சமூக மாற்றங்கள் எளிதில் நிகழ்வதில்லை .

சிந்திக்க வேண்டிய விசயம், இயக்குனர் வசந்தபாலன் அவர்களின் பதிவு..

நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் பெற்றோரிடம் இருந்து வீடு, கார், நகைகள், நிலம் வேண்டும் என கேட்டது குறித்து இயக்குனர் வசந்தபாலன் கருத்து தெரிவித்துள்ளார். சிந்திக்க வேண்டிய விசயம் இயக்குனர் வசந்தபாலன் அவர்களின் பதிவு.. கோபிநாத் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சியில் தாயும், மகள்களும் கலந்து கொண்டனர். அந்த மகள்களோ தங்கள் திருமணத்திற்கு பெற்றோர் கடன்பட்டாலும் பரவாயில்லை நகை, பணம், வீடு, கார், நிலம் வாங்கித் தர வேண்டும் என கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் கேட்டனர். இந்நிலையில் இது குறித்து இயக்குனர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, வரதட்சணை சமீபத்திய நீயாநானாவில் வெளியான பெண்களே தங்கள் பெற்றோரிடம் வரதட்சணை கேட்ட நிகழ்ச்சியைப் பார்த்தேன். இன்று இணையத்தின் வைரல் அது தான். பெண்கள் பெண்கள் படுகிற பாலியல் தொல்லைகளை எண்ணி என்னை போன்றோர் எல்லாம் கலங்கி கொண்டிருக்கிற நிலையில், மகளை உள்ளங்கையில் வைத்து தாங்குகிற பெற்றோர்கள் உள்ள குடும்பங்களில் பெண்களின் மனநிலை திருகி போய் கிடக்கிறது. வழிப்பறி கோஷ்டி எந்த அறமின்றி தன் பெற்றோரிடம் கொள்ளை அடித்து விட்டு கணவன...