பிச்சைக்காரன்: சாமி, ரொம்ப பசிக்குது. சோறு வாங்கி குடுங்க. இவன்: கவலைப்படாதே, உனக்கு சரக்கே வாங்கித்தாரேன். பிச்சைக்காரன்: அய்யோ சாமி, எனக்கு பழக்கம் இல்லீங்க. இவன்: சரி வா, சிகரெட் வாங்கித்தாரேன். பிச்சைக்காரன்: வேண்டாம் சாமி. சோறு மட்டும் போதும். இவன்: சரி வா, குதிரை ரேஸுக்கு போவோம். அப்புறம் சாப்பாடு வாங்கி தாரேன். பிச்சைக்காரன் : எனக்கு சூதாட்டம் புடிக்காது சாமி. இவன்: சரி வா, உனக்கு சாப்பாடே வாங்கி தாரேன். அதுக்கு முன்னாலே நீ, என் வீடு வரை வரணும். பிச்சைக்காரன்: எதுக்கு சாமி. இவன்: குடி., சூதாட்டம் என எந்த கெட்டபழக்கமும் இல்லாம, இருக்கும் ஒரு மனிதனின் நிலமைய. என் மனைவிக்கு உன்ன வச்சி உணர்த்தணும்.
படித்ததில் சிரித்தது நானும் என் நண்பனும் பாரில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம் அப்போது அருகில் ஒருவர் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். ஸ்பீக்கர் ஆனில் இருந்த்தால் மறுமுனையில் பேசிய அவர் மனைவியின் குரல் தெளிவாக கேட்டது. "ஏங்க…நான் இப்ப ஷாப்பிங் மால் உள்ளே இருக்கேன். நான் சொன்னேனே.. டிஜிட்டல் கேமரா.. இங்க இருக்குங்க... இருபதாயிரம்தான் விலை. வாங்கிகட்டுமா...?" "வாங்கிக்க...!" "அப்புறம்... நான் கேட்டேனே ஒரு வைர நெக்லஸ்... அதுவும் இங்க இருக்குங்க... விலைதான் ஒண்ணரை லட்சம் சொல்றான்..." "ஒண்ணரை லட்சம்தான... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...!" “அப்புறம் ஒரு புடவை பார்த்தேன் ரொம்ப காஸ்ட்லியா சொல்றான்” “ரேட்ட பார்க்காதேமா உனக்கு புடிச்சி இருந்தா வாங்கிறுமா” "ஏங்க... அப்புறம் நாம பார்த்தோமே ஒரு கார்... இப்ப ஆஃபர் போட்டிருக்காங்க... விலை பதினெட்டு லட்சம் சொல்லறான்... உங்க செக் இருக்கு குடுத்துறவா..?" "ஓகேமா…… இதுலாம் கேக்கலாமா உனக்கு புடிச்சிருந்தா போதும்" "ஓகேங்க... சீக்கிரம் விட்டுக்கு வாங்கன்னு ......