Skip to main content

Posts

சாமி, ரொம்ப பசிக்குது. சோறு வாங்கி குடுங்க...

பிச்சைக்காரன்:     சாமி, ரொம்ப பசிக்குது.  சோறு வாங்கி குடுங்க. இவன்:    கவலைப்படாதே,  உனக்கு சரக்கே வாங்கித்தாரேன். பிச்சைக்காரன்:     அய்யோ சாமி,  எனக்கு பழக்கம் இல்லீங்க. இவன்:       சரி வா,  சிகரெட் வாங்கித்தாரேன். பிச்சைக்காரன்:      வேண்டாம் சாமி.   சோறு மட்டும் போதும். இவன்:     சரி வா,   குதிரை ரேஸுக்கு போவோம்.  அப்புறம் சாப்பாடு வாங்கி தாரேன். பிச்சைக்காரன் :      எனக்கு சூதாட்டம் புடிக்காது சாமி. இவன்:      சரி வா,  உனக்கு சாப்பாடே வாங்கி தாரேன்.   அதுக்கு முன்னாலே நீ, என் வீடு வரை வரணும். பிச்சைக்காரன்:       எதுக்கு சாமி. இவன்:     குடி.,  சூதாட்டம் என எந்த கெட்டபழக்கமும் இல்லாம,  இருக்கும் ஒரு மனிதனின் நிலமைய. என் மனைவிக்கு  உன்ன வச்சி உணர்த்தணும்.
Recent posts

நானும் என் நண்பனும் பாரில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம்...

படித்ததில் சிரித்தது நானும் என் நண்பனும் பாரில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம் அப்போது அருகில் ஒருவர் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். ஸ்பீக்கர் ஆனில் இருந்த்தால் மறுமுனையில் பேசிய அவர் மனைவியின் குரல் தெளிவாக கேட்டது. "ஏங்க…நான் இப்ப ஷாப்பிங் மால் உள்ளே இருக்கேன். நான் சொன்னேனே.. டிஜிட்டல் கேமரா.. இங்க இருக்குங்க... இருபதாயிரம்தான் விலை. வாங்கிகட்டுமா...?" "வாங்கிக்க...!" "அப்புறம்... நான் கேட்டேனே ஒரு வைர நெக்லஸ்... அதுவும் இங்க இருக்குங்க... விலைதான் ஒண்ணரை லட்சம் சொல்றான்..." "ஒண்ணரை லட்சம்தான... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...!" “அப்புறம் ஒரு புடவை பார்த்தேன் ரொம்ப காஸ்ட்லியா சொல்றான்” “ரேட்ட பார்க்காதேமா உனக்கு புடிச்சி இருந்தா வாங்கிறுமா” "ஏங்க... அப்புறம் நாம பார்த்தோமே ஒரு கார்... இப்ப  ஆஃபர் போட்டிருக்காங்க... விலை பதினெட்டு லட்சம் சொல்லறான்... உங்க செக் இருக்கு குடுத்துறவா..?" "ஓகேமா…… இதுலாம் கேக்கலாமா உனக்கு புடிச்சிருந்தா போதும்" "ஓகேங்க... சீக்கிரம் விட்டுக்கு வாங்கன்னு ......

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்...

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?” 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல” வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” “ஒண்ணுமே ஆகாது சார்” ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?” “உங்க கை வலிக்கும் சார்” “ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…” “உங்க கை அப்படியே மரத்துடும் சார்” “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?” “இல்லை சார். அது வந்து…” “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?” “கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்” ”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆ...

புத்தர் ஒரு உண்மை சொன்னார்...

புத்தர் ஒரு உண்மை சொன்னார், இறப்பு எல்லோருக்கும் வந்தே தீரும் ஆனால் யாரும் இறக்க விரும்புவதில்லை ஆனால் இன்று நிலைமை வேறு ,விபரீதமாக உள்ளது உணவுஎல்லோருக்கும் வேண்டும் ஆனால் யாரும் பயிர் செய்ய விரும்புவதில்லை,  தண்ணீர் எல்லோருக்கும் வேண்டும் யாரும் அதை சேமிக்க விரும்புவதில்லை , பால் எல்லோருக்கும் வேண்டும் யாரும் பசுவை வளர்க்க விரும்புவதில்லை, நிழல் எல்லோருக்கும் வேண்டும் யாரும் மரம் வளர்க்க விரும்புவதில்லை , மருமகள் எல்லோருக்கும் வேண்டும் யாரும் மகளை பெற்றெடுக்க விரும்பவில்லை, நல்ல செய்தி படித்து ஆஹா வென, புகழ்பவர் அதை மக்களிடம் கொண்டுசெல்ல விரும்புவதே இல்லை.  நீங்கள் ???????"""""

பாலியல் வன்முறைக்கு எதிராக எல்லோரும் இதை பகிருங்கள் தோழர்களே...!

அப்பான்னு நினைச்சேன்...! அசிங்கமாய் தொட்டான்.....! சகோதரன்னு பழகினேன்....! சங்கடமாய் தொட்டான்........! மாமான்னு பேசினேன்......! மட்டமாய் நடந்தான்.....! உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றன.....! பாதுகாப்பை தேடி பள்ளிக்கு சென்றேன்...! ஆசிரியனும் அரவணைத்து மறுக்காதே மதிப்பெண் குறையும் என்றான்....! நட்புக்கரமொன்று நண்பனாய் தலைகோதி தூங்கென்றான்....! மரத்த மனம் மருண்டு சுருண்டு தூங்கையில் கைப்பேசியில் படமெடுத்தான் அவனும் ஆண்தானே...! கதறி அழுது கடவுளிடம் சென்றேன் ஆறுதலாய் தொட்டு தடவி ஆண்டவன் துணையென்றான் பூசாரியான்....! அலறி ஓடுகிறேன் எங்கே போவேன்? சமத்துவம் வந்ததெனெ சத்தமாய் கூறுகின்றனர் பெண்ணை பெண்ணாக பார்க்காமல் மனிதராய் பார்ப்பது எக்காலம்? பாவிகளின் பாலியல் வன்முறை என்று ஓயுமோ? #பாலியல வன்முறைக்கு எதிராக எல்லோரும் இதை பகிருங்கள் தோழர்களே...! அப்படி என்னடா உங்களுக்கு அடங்காத வெறி சிதைத்துவிட்டீர்களே சிறு பிள்ளையின் குறி...! பால்மணம் மாறா பச்சிளங்குழந்தைகளை பாலியல் வல்லுறவால் பாழ்படுத்தி கொன்றீர்களே...! உறுப்பை மட்டு...

தெரிந்துகொள்வோம்...

#தெரிந்துகொள்வோம். ஆங்கிலத்தில் 1 முதல் 999 வரை எழுதும்போது, A என்ற எழுத்தே வராது. ஒரு முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேரத்தை குறிக்கிறது. செல்போனில் பயன்படுத்தப்படும் சிம்கார்டு என்பதன் விரிவாக்கம், #சப்ஸ்கிரைப்பர்ஸ்_ஐடன்டி_மாட்யூல் என்பதாகும். ஒரு குயர் என்பது 24 தாள்கள்.  ஒரு ரீம் என்பது 20 குயர்கள். ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள். ஒரு டேபிள்ஸ்பூன் என்பது 120 துளிகள் கொண்டது. கொலம்பியாவில் உள்ள ஷனீகர் என்ற நதியில் மீன்களே கிடையாது. துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு ஸ்பெயின். உலகில் கடலின் மொத்த பரப்பளவு, 360080000 சதுர கிலோமீட்டர்கள். உலகின் குறைந்த நீளம் கொண்ட இருப்புப்பாதை உள்ள நாடு வாடிகன்.   மொத்த நீளம் 90 அடி மட்டுமே.   இது இத்தாலி ரயில்வேயுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரிசாவின் பழைய பெயர் கலிங்கம். அசாமின் பழைய பெயர் காமரூபம். ஈரானின் பழைய பெயர் பெர்ஷியா. ஈராக்கின் பழைய பெயர் மெசபடோமியா. நமது தலையின் எடை 3.175 கிலோகிராம். துருவப்பிரதேசத்தில் கொசுக்கள் இல்லை.

மனைவி ...கணவனிடம் கேட்டாள்....

👱‍♀மனைவி ...கணவனிடம் கேட்டாள்.... நான் ஒரு 4நாள் உங்க கண்ணுல படாம இருந்தா நீங்க எப்படி feel பண்ணுவீங்க.? அப்பாவி 👱🏽கணவன் (சந்தோசத்துல அவசர பட்டு).||||||| ரொம்ப happyயா feel பண்ணுவேன்......😀😀😀😀😀 அப்புறம் என்ன.? திங்கள் கிழமையும் ...அவனுக்கு பொண்டாட்டி கண்ணுக்கு படல.... 😑😑😑 செவ்வாய் கிழமையும் பொண்டாட்டி கண்ணுல படல😑😑😑😑😑 புதன் கிழமையும் ...பொண்டாட்டி கண்ல படல😑😑😑😑😑 வியாழ கிழமையும் பொண்டாட்டி கண்ல படல😑😑😑😑😑 வெள்ளிகிழமை சாயங்காலமா... கண்ல வீக்கம் குறைஞ்சி..லேசா தெரிய ஆரம்பி்ச்சா மகராசி😉😉😉😉😉😉😉