அப்பான்னு நினைச்சேன்...!
அசிங்கமாய் தொட்டான்.....!
சகோதரன்னு பழகினேன்....!
சங்கடமாய் தொட்டான்........!
மாமான்னு பேசினேன்......!
மட்டமாய் நடந்தான்.....!
உறவுகள் அனைத்தும்
உறவாடவே
அழைக்கின்றன.....!
பாதுகாப்பை தேடி
பள்ளிக்கு சென்றேன்...!
ஆசிரியனும்
அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்
குறையும் என்றான்....!
நட்புக்கரமொன்று நண்பனாய்
தலைகோதி தூங்கென்றான்....!
மரத்த மனம்
மருண்டு சுருண்டு
தூங்கையில் கைப்பேசியில்
படமெடுத்தான்
அவனும் ஆண்தானே...!
கதறி அழுது கடவுளிடம்
சென்றேன்
ஆறுதலாய்
தொட்டு தடவி
ஆண்டவன்
துணையென்றான்
பூசாரியான்....!
அலறி ஓடுகிறேன்
எங்கே போவேன்?
சமத்துவம் வந்ததெனெ
சத்தமாய் கூறுகின்றனர்
பெண்ணை பெண்ணாக
பார்க்காமல் மனிதராய்
பார்ப்பது எக்காலம்?
பாவிகளின் பாலியல்
வன்முறை என்று ஓயுமோ?
#பாலியல வன்முறைக்கு
எதிராக எல்லோரும் இதை
பகிருங்கள் தோழர்களே...!
அப்படி என்னடா
உங்களுக்கு
அடங்காத வெறி
சிதைத்துவிட்டீர்களே
சிறு பிள்ளையின் குறி...!
பால்மணம் மாறா
பச்சிளங்குழந்தைகளை
பாலியல் வல்லுறவால்
பாழ்படுத்தி கொன்றீர்களே...!
உறுப்பை மட்டுமே
பார்க்கும் உங்கள்
இதயம் இரும்பிலா
செய்தார்கள்...!
அரிப்பெடுத்த
உங்களை நெருப்பிட்டு
அழிக்கவும் வேண்டாமோ...!
சிசு கொலையில்
தப்பித்து உங்கள்
சில்மிஷத்தால்
சாகுதடா எம் குழந்தை...!
பிள்ளை பேறு
பெண்களுக்கு
மறு பிறப்பு
கேட்டுப்பாருங்கள்
உங்கள் தாயிடம்...!
பெற்ற பிள்ளை
சிதைத்து
கொல்லப்பட்டால்
என்னாகும்
போய்ப்பாருங்கள்
இழந்த தாய்நிலை....!
ஹாசினியும் ரித்திகாவும்
இன்னும் இன்னும்
எத்தனையோ
நித்தம் நித்தம்
சாகுதடா....!
வல்லுறவு செய்கின்ற
வல்லூறு உங்களிடம்
காப்பாற்ற பெற்றவரின்
நித்திரையும் போகுதடா....!
இனத்தினைப் பெருக்க
இருக்கும் உறுப்பால்
இனத்துக்கே களங்கம்
விளைப்பதும் ஏனடா....!
போதுமடா போதுமடா
புத்தி கெட்ட மானிடரே
உங்களைப் பெற்றவளும்
வயிறெரிந்து தூற்றுவாளே
இனியேனும் திருந்துங்கள்
இதயத்தால் வருந்துங்கள்....!
🖋எழுத்தாளர் பெயர்
தெரியவில்லை...!!!
பகிரலாம் என
தோன்றியது...!

Comments
Post a Comment